வெளுத்து வாங்கும் கனமழை... நெல்லை மாவட்டத்துக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!


வெளுத்து வாங்கும் கனமழை... நெல்லை மாவட்டத்துக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!
x

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது.

நெல்லை,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தொடர் மழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழுவுக்கு 25 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 100 பேர் இந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்துக்கான அவசரகால உதவி எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1077,

மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் - 1070,

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி - 101 மற்றும் 112,

மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் - 94987 94987,

மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு - 104

அவசர மருத்துவ உதவிக்கு - 108 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story