அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது - காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்


அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது - காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:19 PM GMT (Updated: 15 Jun 2023 12:20 PM GMT)

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது.

சென்னை,

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவு வந்த உடன், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய 2 மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீது சற்று நேரத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.


Next Story