அறுவடை பணிகள் தீவிரம்


அறுவடை பணிகள் தீவிரம்
x

நரிக்குடி அருகே அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே உள்ள கட்டனூர் கிராமத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வைகை ஆற்றிலிருந்து கிருதுமால் நதிமூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தது. இதனால் இந்த பகுதியில் நெல் விவசாயம் காலதாமதமாக நடைபெற்றது. இந்தப்பகுதியில் நெல் முற்றிலும் விளைச்சல் அடைந்துள்ளது. விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்துள்ள நெல் கதிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story