பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடக்கம்


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடக்கம்
x

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது.

திருச்சி

அரையாண்டு தேர்வு

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கியது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று அந்தந்த பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் அரையாண்டு தேர்வை எழுதினர்.

பொதுத்தேர்வை போல் நடைபெற்ற இந்த தேர்வு காலையில் 9.45 மணி முதல் பகல் 1 மணி வரை பிளஸ்-2 மாணவர்களுக்கும், மதியம் 1.45 முதல் மாலை 5 மணி வரை பிளஸ்-1 மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றது. முதல்நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு...

இன்று (வெள்ளிக்கிழமை) ஆங்கிலமும், 19-ந் தேதி முதல் பிற பாடங்களுக்கும் தேர்வு நடைபெறும். வருகிற 23-ந் தேதி இத்தேர்வு முடிவடைகிறது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

மேலும் 8, 9-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வும், 6, 7-ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவ தேர்வுகளும் 19-ந்தேதி தொடங்குகிறது. பிற வகுப்புகளுக்கும் தேர்வுகள் தொடங்கி வருகிற 23-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு, ஜனவரி மாதம் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.


Next Story