பட்டதாரி பெண் மாயம்


பட்டதாரி பெண் மாயம்
x

பட்டதாரி பெண் மாயம் ஆனார்

கரூர்

நச்சலூர் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் மதுபாலா (வயது 21). பி.எஸ்.சி. படித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி திருச்சிக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story