அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

அரியலூரில் சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசிற்கு சொந்தமான, அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு 1996-ம் ஆண்டு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்துவது வருந்தத்தக்கது. மக்களை காக்க வேண்டிய அரசே அவர்களை எதிர்த்து வழக்கு தொடுப்பது வேதனைக்குரியது.

எனவே நிலம் கொடுத்த விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீட்டையும், நீதிமன்ற உத்தரவுப்படி காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story