நெல்லையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி


நெல்லையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 2 July 2024 9:27 AM GMT (Updated: 2 July 2024 9:33 AM GMT)

நெல்லையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்'தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருநெல்வேலியில் அரசு பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான பிரச்சினையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி

கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.

சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் சாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story