அரசு பள்ளியில் மாறுவேட போட்டி


அரசு பள்ளியில் மாறுவேட போட்டி
x

நீடாமங்கலம் அருகே அரசு பள்ளியில் மாறுவேட போட்டி

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாறுவேட போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். போட்டியில் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவ்வையார், காந்தி, பாரதியார், வேலுநாச்சியார், ஜான்சி ராணி, அப்துல் கலாம், விவசாயி உள்ளிட்டவர்களின் வேடங்களில் தோன்றி தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். முன்னதாக தலைமை ஆசிரியர் பழனிசெல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியை பற்குணவதி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story