அரசு பள்ளியில் மாறுவேட போட்டி


அரசு பள்ளியில் மாறுவேட போட்டி
x

அரசு பள்ளியில் மாறுவேட போட்டி நடந்தது.

கரூர்

தாந்தோன்றி ஒன்றியம் துளசிகொடும்பு அரசு தொடக்க பள்ளியில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான மாறுவேட போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வனிதா தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் செல்வராணி வரவேற்று பேசினார். இதில் மாணவ-மாணவிகள் தேச தலைவர்களின் வேடங்களில் வந்து கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஆசிரியர் பயிற்றுனர் மஞ்சுளா பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு அமைப்பாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story