நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார்-சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை


நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார்-சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை
x

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார் என சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுக்கோட்டை

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story