அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மகளிர் தின கொண்டாட்டம்


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மகளிர் தின கொண்டாட்டம்
x

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பொருட்கள் வழங்கி, உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கான உடை, ஸ்பூன், டம்ளர், துண்டு, பிரட் உள்ளிட்ட பொருட்களை முன்னாள் அரசு வக்கீல் முனைவர் சாந்தி வழங்கினார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பிரசன்னா, மாலதி, ரம்யா, சுகந்தி, நர்மதா, ரமேஷ், குழந்தை வேல் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெண் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தப்பட்டது.


Next Story