அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்படைக்கப்பட்ட விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கும் போது அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தாலுகா அலுவலகங்கள் 5 யூனியன் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 அலுவலகங்கள் உள்பட மொத்தம் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.


Next Story