டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியை துரிதப்படுத்த வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி


டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியை துரிதப்படுத்த வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி
x

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி

மலைக்கோட்டை:

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். நன்றாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். அமைச்சர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கனிவோடு செயல்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ெகாள்முதல் பணியில் துரிதப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உரங்களை வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். பொதுப்பணித்துறை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும்.

சன்மார்க்க சொற்பொழிவாளர் ஊரான் அடிகளார் மறைவு தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் பெரிய இழப்பு. ஜி.எஸ்.டி. வரி ஏற்ற, இறக்கம்‌ என்பது நிரந்தரமல்ல. நிதித்துறையை பொறுத்தவரையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதில் மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டு சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டு முடிவு எடுக்கிறார்கள். மக்களை பாதிக்கின்ற முடிவென்றால் அதனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழக கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் தி.மு.க. அரசுக்கு வழக்கமாகிவிட்டது. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். இருப்பினும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story