கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 2 வயது குழந்தையுடன் பெண் தர்ணா


கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 2 வயது குழந்தையுடன் பெண் தர்ணா
x

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 2 வயது குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் ஜோதி. மதுரை பெருங்குடியை சேர்ந்த விஜயன் மகன் கார்த்திக் என்பவருடன் ஜோதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜோதி கர்ப்பமான நிலையில் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் வந்தனர். வீட்டிற்குச் சென்ற அடுத்த நாள் ஜோதி கணவரை தொலைபேசியில் அழைத்து உள்ளார். கார்த்தியின் தாயார் போனை எடுத்து நீ எதற்காக போன் செய்கிறாய் எனக் கூறி போனை துண்டித்து விட்டார். தொடர்ந்து அழைத்ததற்கு கார்த்திக் எடுத்துப் பேசியுள்ளார். வரதட்சணையாக எனது சகோதரிக்கு 50 பவுன் நகை போட்டுள்ளோம். ஆனால் எனக்கு உங்கள் வீட்டில் 25 பவுன் நகை தந்துள்ளீர்கள் எனக் கூறினார். அதுவும் போலியானது என கூறி போனை வைத்துள்ளார். இந்த நிலையில் ஜோதி கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர்கள் வீட்டை காலி செய்து சகோதரியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ஜோதி, கணவருடன் தன்னை சேர்ந்து வைக்க கோரி பெருங்குடியில் உள்ள அவரது சகோதரி வீட்டின் முன்பு 2 வயது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிலதா மற்றும் போலீசார், ஜோதி, அவரது கணவர் கார்த்திக்கை அழைத்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story