சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது


சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது
x

சிறுமி கர்ப்பமான வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் மாவட்டம் மணவாசியை சேர்ந்தவர்கள் மல்லீஸ்வரன் (வயது 25), இளவரசன் (24). இவர்கள் 2 பேரும் ஒரு சிறுமியுடன் பழகி அவரை கர்ப்பமாக்கியது தொடர்பான வழக்கில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் 2 பேரையும் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். இந்தநிலையில் இதே வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான கரூர் வீரராக்கியம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (27) என்பவரை குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story