2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பாய்ந்தது.

திருச்சி

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி தொழிலாளியை அரிவாளால் வெட்டி அவரது கையை துண்டித்து எடுத்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் (வயது 25), ஹரிபிரசாத் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் விஜய் மீது ஏற்கனவே பாலக்கரையில் ரோந்து பணியில் இருந்த காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கு, கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் தாலிச்சங்கிலியை பறித்த வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள், 5 அடிதடி வழக்குகள் உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் ஹரிபிரசாத் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு விஜய், ஹரிபிரசாத் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story