பெண்ணை கடத்தியதாக கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண்ணை கடத்தியதாக கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பெண்ணை கடத்தியதாக கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் குட்லு ரமேஷ் என்ற ரமேஷ் அரவிந்த். இவர் உறையூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மாதம் 10-ந்தேதி பணத்திற்காக கடத்தியதாக, அவரை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் விசாரணையில், ரமேஷ் அரவிந்த் மீது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி செய்ததாக 2 வழக்குகள், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 2 வழக்குகள் உள்பட மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, ரமேஷ் அரவிந்த் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்று விசாரணையில் தெரியவந்ததால் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், குண்டர் சட்டத்தில் ரமேஷ் அரவிந்தை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருச்சி மத்திய சிறையில் உள்ள ரமேஷ் அரவிந்திடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.


Next Story