ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த மாதம் 10-ந் தேதி பஸ்சில் சென்ற ஒருவரிடம் செல்போன் பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியகடைவீதியை சேர்ந்த ரவுடி வசந்தகுமார் (வயது 30) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வசந்தகுமார் மீது கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற ராணுவவீரர், கல்லூரி மாணவி, விவசாயி ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 8 வழக்குகளும், கோட்டை போலீஸ் நிலையத்தில் ஜூஸ் கடை உரிமையாளரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்த ஒரு வழக்கு உள்பட 7 வழக்குகளும், காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்பட மொத்தம் 33 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு வசந்தகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வசந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.


Next Story