பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதி(வயது 41). இவர் மது விற்றதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோமதி தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் மீது ஏற்கனவே மது விற்றது தொடர்பான வழக்குகள் உள்ளதாகவும், எனவே இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று கோமதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மகளிர் சிறையில் போலீசாரிடம் வழங்கப்பட்டது.


Next Story