காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை...!


காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை...!
x

கோவையில் காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட தடைவிதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை,

காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்.2) கோவையில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (அக்.2) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது கூடாது.

கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுபவா்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story