ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாள் குளக்கரையில் கஜேந்திர மோட்ச திருவிழா


ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாள் குளக்கரையில் கஜேந்திர மோட்ச திருவிழா
x

ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாள் குளக்கரையில் கஜேந்திர மோட்ச திருவிழா நடந்தது.

மதுரை


ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாள் குளக்கரையில் கஜேந்திர மோட்ச திருவிழா நடந்தது.

சாப விமோசனம்

விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் என்ற யானையாக பிறந்தார். அதேபோன்று முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார். இருவருக்கும் சாப விமோசனம் அளிக்க பெருமாள் வந்தருளுவார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.

அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். தாகம் தணிக்க கஜேந்திரன் என்ற யானை தனது கூட்டத்துடன் குளத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை கஜேந்திரனான யானையின் காலை கவ்விப் பிடித்தது.

மற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடம் இருந்து யானையை காப்பாற்ற முடியவில்லை. முதலையும், யானையின் காலை விடுவதாக தெரியவில்லை. தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த மன்னன் கஜேந்திரனான யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பறித்து வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிறி சரணாகதி அடைந்தது.

கஜேந்திர மோட்ச திருவிழா

தனது பக்தனின் (யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்கர ஆயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றியும், முதலையான கந்தர்வனுக்கும் மோட்சம் அளித்தார். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன. இந்த நிகழ்வு மாசி மாத மக நட்சத்திரத்தன்று நடைபெற்றது.

இந்த புராணத்தை நினைவுக்கூரும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும். நேற்று அதிகாலை 1 மணிக்கு யோக நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக்கரையில், கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை கோவில் பட்டர்கள் செய்து காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story