ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்


ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

நரிக்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காைளகள் சீறிப்பாய்ந்தன.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காைளகள் சீறிப்பாய்ந்தன.

ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே ஒட்டங்குளம் கிராமத்தில் அய்யனார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் வாடி வாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், திருச்சுழி துணை சூப்பிரண்டு மதியழகன் ஆகியோரது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிப்பதற்காக மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு முயற்சித்தனர்.

பரிசு பொருட்கள்

பல காளைகள் வீரர்களுக்கு அடங்காமல் பாய்ந்து சென்றன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களுக்கு அடங்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 250 காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 1 மணி நேரத்திற்கு 25 மாடுபிடி வீரர்கள் என காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போட்டிகள் நடைபெற்றன.

பாதுகாப்பு பணி

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story