பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை


பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
x

பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, தேன், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story