முப்பெரும் தேவியர் கோவிலில் பவுர்ணமி பூஜை


முப்பெரும் தேவியர் கோவிலில் பவுர்ணமி பூஜை
x

முப்பெரும் தேவியர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும்தேவியர், பவானியம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமண பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், கொேரானா வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினர். இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story