நண்பர்களான ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி


நண்பர்களான ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
x

ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று காலை நிருபர்களிடம் பேசியதாவது,

அக்னிபாத் திட்டம் மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு. சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்சிடம் கொடுப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும். ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல் தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க முயச்சிக்கிறார் மோடி.

காங்கிரஸ் பொதுத்துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பாஜக பொதுத்துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சிறந்த நண்பர்கள் அவர்கள் தங்களுக்குள்ளான கருத்துவேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும். அதிமுகவில் என்ன நடந்த்து என்பது எனக்கு தெரியாது ; தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது.

நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்கறையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பாஜக கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளனர். திரௌபதி என்ற பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story