6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா


6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், க ல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை விசாரணை செய்து அதன்மீது மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இலவச வீட்டுமனை பட்டா

கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி கிராமம் கூட நாணல் பகுதியில் வசிக்கும் 6 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டாக்களை, கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story