விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி


விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி
x

நாகலூர் கூத்தக்குடி கிராமங்களில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உஷா முருகன், கூத்தக்குடி சுகன்யா நாராயணசாமி, அசகளத்தூர் கலியன், முடியனூர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் நிறைமொழி வரவேற்றார். தொடர்ந்து நாகலூர் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விலை இல்லா ஆடுகள் வழங்கப்பட்டன. இதேபோல் கூத்தக்குடி ஊராட்சியிலும் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எத்திராசு, ஒன்றிய துணை செயலாளர்கள் கே.கே.அண்ணாதுரை, கணேசன், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, நிர்வாகிகள் அப்துல் கபூர், இப்ராஹீம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும் 35 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.


Next Story