360 பேருக்கு விலையில்லா சைக்கிள்


360 பேருக்கு விலையில்லா சைக்கிள்
x

360 பேருக்கு விலையில்லா சைக்கிள்

மயிலாடுதுறை

திருக்கடையூர் - ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கடையூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதிசிவராஜ், மாவட்ட கவுன்சிலர் துளசிரேகாரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார் வரவேற்று பேசினார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 360 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குத்தாலம் ஒன்றியம் கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை சங்கர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story