விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்வு


விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்வு
x

விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூருக்கு வரும் விவசாயிகளுக்கும், சந்தைகளுக்கும் கொண்டு சென்று ஏலம் விடுகின்றனர்.கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி 1 கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப்பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220- முல்லைப்பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

விளைச்சல் குறைந்ததால், பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story