வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Nov 2022 7:00 PM GMT (Updated: 13 Nov 2022 7:01 PM GMT)

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு, தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்டு கொள்ளாமல் நிலக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் வைகை ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் நேரில் சென்று கண்காணித்து ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிப்பவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Next Story