படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் சாவு


படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் சாவு
x

நகையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நகையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

கடலில் தவறி விழுந்தார்

நாகை நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21-ந் தேதி, நம்பியார் நகர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த அய்யாசாமி (வயது 39), இவருடன் அதே பகுதியை சேர்ந்த ரகு, சிவசங்கரன் உள்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் அன்று இரவு அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அய்யாசாமி திடீரென நிலை தடுமாறி கடலில் விழுந்தார். உடனே சக மீனவர்கள் கடலில் இறங்கி தேடியும் அவர் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இதுகுறித்து மீன்வளத்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக 10-க்கும் மேற்பட்ட பைபர் படகில் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அய்யாசாமியின் உடலை மீட்டு நாகை நம்பியார் நகர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடற்கரையில் குவிந்து அய்யசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அய்யசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அய்யாசாமிக்கு மனைவி, 3 மகள்களும், ஒரு மகன் உள்ளனர்.


Next Story