நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு


நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
x

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 8.30 மணிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில், இன்று(செவ்வாய்க்கிழமை) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.


Next Story