பொருட்களுக்கு தீ வைப்பு; ஒருவர் கைது


பொருட்களுக்கு தீ வைப்பு; ஒருவர் கைது
x

பொருட்களுக்கு தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி செல்வமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவேல்(வயது 71). பழைய பேப்பர், உபயோகமற்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்கள் பொதுப்பாதையில் கிடப்பதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்த நிலையில், சம்பவத்தன்று மர்ம நபர் அந்த பொருட்களை தீ வைத்து எரித்துவிட்டதாக உப்பிலியபுரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி, எரகுடியை சேர்ந்த குணா(43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story