தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து


தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து
x

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி வினோபாகாலனியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நடராஜபிரபு என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இங்கு 6 பெண் தொழிலாளிகள் வேலை செய்து வந்தனர். நேற்று வழக்கம்போல் தீப்பெட்டிகளில் தீக்குச்சிகள் அடைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் தொழிலாளிக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story