நிதிநிறுவன அதிபர் மாயம்


நிதிநிறுவன  அதிபர் மாயம்
x

நிதிநிறுவன அதிபர் மாயம் ஆனார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). நிதிநிறுவன அதிபரான, இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் சரவணன் நேற்று முன்தினம் தனது தொழில் விஷயமாக பணம் வசூல் செய்ய வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மல்லிகா தனது கணவர் சரவணனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சரவணனை தேடி வருகின்றனர்.


Next Story