காளிகாம்பாள் கோவில் திருவிழா


காளிகாம்பாள் கோவில் திருவிழா
x

மாரண்டஅள்ளியில் காளிகாம்பாள் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

மாரண்டஅள்ளி, ஆக.8-

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் காளிகாம்பாள் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் சாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story