மாரியம்மன் கோவில் திருவிழா


மாரியம்மன் கோவில் திருவிழா
x

தர்மபுரி அன்னசாகரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய் மாரியம்மன் கோவில் திருவிழா சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பட்டாளம்மன், செல்லியம்மனுக்கு துள்ளு மாவு மற்றும் பானகம் படைத்தல் நிகழ்ச்சி, அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story