தர்மபுரி அருகேஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாபால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


தர்மபுரி அருகேஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாபால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Aug 2023 7:30 PM GMT (Updated: 14 Aug 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி காந்திநகர் மாவு தலையன் கொட்டாய் கிராமத்தில் ஓம் சக்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. காந்தி நகரில் இருந்து புறப்பட்டு இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், கரகம் மற்றும் தீச்சட்டி ஏந்தியும் நேத்திக்கடன் செலுத்தினர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பல அபிஷேகமும், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருசாமி ராஜா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story