விருதுநகர் அருகே விபத்தில் தந்தை- சிறுவன் படுகாயம்


விருதுநகர் அருகே விபத்தில் தந்தை- சிறுவன் படுகாயம்
x

விபத்தில் தந்தை- சிறுவன் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


விருதுநகர் ரோசல்பட்டி ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் அருண் (வயது 36). இவரது மகன் கிஷாந்த் (8). இந்நகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளியில் 3-வது படிக்கும் கிஷாந்தை, அருண் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்த வெற்றிக்கனி (27) என்பவர் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அருண், கிஷாந்த் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அருண் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வெற்றிக்கனி மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story