விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஒரத்தநாடு, திருவோணத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை நிதியை மத்திய அரசு குறைவாக ஒதுக்கீடு செய்வதாகவும், மேலும் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் தலைமை வகித்தனர். இதைப்போல திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க திருவோணம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் பி.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story