கிணற்றில் விவசாயி பிணம்


கிணற்றில் விவசாயி பிணம்
x

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோதண்டராமன் (வயது 38) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிபார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஹைதராபாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கோதண்டராமன் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கோதண்டராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோதண்டராமன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story