அரசு மானியத்துடன் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு மானியத்துடன் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

அரசு மானியத்துடன் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அரியலூர் மாவட்டத்திற்கு 20 ஏக்கர் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வீதம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், குறைந்தது 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 1 ஹெக்டேர் நிலப்பரப்பில் தொடர்ந்து பல்லாண்டுகள் பயன்தரும் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு 3 ஆண்டு காலம் பராமரிக்க வேண்டும். பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதிக்குள் தொடர்புடைய கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story