விவசாயிகள் சங்க மாநாடு


விவசாயிகள் சங்க மாநாடு
x

ரிஷிவந்தியம் ஒன்றிய விவசாயிகள் சங்க மாநாடு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய மாநாடு வாணாபுரம் பகண்டை கூட்டு ரோட்டில் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநாட்டில் இயற்கை வளங்களை காத்திடவும், கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வழியாக ரிஷிவந்தியம் ஒன்றிய கிராமங்களை இணைத்து பஸ் வசதி ஏற்படுத்திதர வேண்டும், உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு மாதாந்திர வாடகை வழங்க வேண்டும், ஏழை எளியோருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய நிர்வாக குழு தலைவராக சாமிநாதன், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக செந்தில், துணைத்தலைவராக சுரேஷ்குமார், துணை செயலாளராக தட்சணாமூர்த்தி உள்பட 15 பேரை கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story