சாலை விபத்தில் விவசாயி பலி


சாலை விபத்தில் விவசாயி பலி
x

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே தொட்டியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 45) விவசாயி. இவர் கச்சிராயப்பாளையம்- கனியாமூர் சாலையில் தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் மொபட்டில் சென்றவர் திடீரென பிரேக் பிடித்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அந்த மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைபரிசோதனை செய்த டாக்டர்கள், கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மொபட்டை ஓட்டி சென்ற சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்தூரை சேர்ந்த நாராயணன் என்பவர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story