சரக்கு வேன் மோதி விவசாயி பலி


சரக்கு வேன் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 13 Sep 2022 7:00 PM GMT (Updated: 13 Sep 2022 7:00 PM GMT)

சரக்கு வேன் மோதி விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே சாமகவுண்டன்வலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 35). விவசாயி. இவர் மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை- திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story