மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 3 Jan 2023 6:47 PM GMT)

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லாக்காபட்டியை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 38). விவசாயி. நேற்று முன்தினம். இவர், வீட்டில் உள்ள மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story