மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 23 Dec 2022 7:00 PM GMT (Updated: 23 Dec 2022 7:01 PM GMT)

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே ஒத்தினிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் மாடுகளை கட்டிவிட்டு மீண்டும் மாலையில் அவிழ்க்க சென்றார். அப்போது தோட்டத்து பகுதியில் மின்கம்பி அறுந்துகிடந்தது. இதனை பார்க்காமல் செல்வராஜ், அந்த மின் கம்பியை மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story