மின்சாரம் தாக்கி விவசாயி சாவு


மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
x
விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே செம்மேடு மதுரா தேவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 50) விவசாயி. நேற்று முன்தினம் இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து ரவி தனது வீட்டில் உள்ள மின்சார பெட்டியில் பீஸ் கேரியர் பழுதாகி உள்ளதா என்பதை பார்க்க அதனை கழட்ட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story