மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
x

நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவர், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் அரசு பஸ்சில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது குமரபட்டிபுதூர் விலக்கு பகுதியில் பெருமாள் இறங்கினார். பின்னர் அங்கிருந்து அவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக சொறிப்பாறைப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story