கார் மோதி விவசாயி சாவு


கார் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:45 PM GMT)

தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55) விவசாயி, இவர் தியாகதுருகத்திற்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக பழனிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பழனிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story